இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரு மருத்துவர் மரணம்!

இந்தூர் (09 ஏப் 2020): இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவர் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். உலகை அச்சுறுத்தும் கொரோனா தொற்றால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 734 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 166 பேர் உயிரிழந்துள்ளனர், 473 பேர் நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலம், இந்தூரைச் சேர்ந்த மருத்துவர் சத்ருகன் புன்ஞ்வானி கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார். இந்தியாவில் கொரோனா…

மேலும்...

பிரதமர் மோடியை சிக்க வைக்கும் முயற்சியா? – மோடியின் பரபரப்பு ட்வீட்!

புதுடெல்லி (08 ஏப் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகமே சோகத்தில் இருக்க, ‘பிரதமர் மோடியை கவுரவிக்க அனைவரும் 5 நிமிடங்கள் எழுந்து நில்லுங்கள்’ என்று இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ” எனக்காக அனைவரும் 5 நிமிடங்கள் எழுந்து நில்லுங்கள் என சமூக வலைதளங்களில் சிலர் பிரசாரம் செய்து வருவதாக எனக்குத் தகவல் கிடைத்தது. முதலில் பார்க்கும்போது என்னைத் தகராறில் சிக்க வைக்க பெயரை பயன்படுத்தி சதி…

மேலும்...

தாயாரின் இறுதிச் சடங்கிற்கு கூட செல்லாமல் கொரோனாவுக்காக சேவையாற்றிய ஆண் செவிலியர்!

ஜெய்ப்பூர் (08 ஏப் 2020): மரணமடைந்த தாயாரின் இறுதிச் சடங்கிற்கு கூட செல்லாமல் மருத்துவ சேவை ஆற்றியுள்ளார் ஆண் செவிலியர் ஒருவர். ஜெய்ப்பூா் எஸ்எம்எஸ் அரசு மருத்துவமனையிலுள்ள கொரோனா சிகிச்சைப் பிரிவில் ஆண் செவிலியராகப் பணிபுரிந்து வருபவா் ராமமூா்த்தி மீனா. அந்த மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வாா்டில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட இத்தாலி நாட்டைச் சோ்ந்தவா்கள் உள்பட 103 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். கடந்த 1 மாதத்துக்கும் மேலாக ராமமூா்த்தி தனது வீட்டுக்கு கூடச் செல்லாமல்…

மேலும்...

தப்லீக் ஜமாஅத் குறித்து வந்த தகவல் பொய்யானது – துணை ஆணையர் விளக்கம்!

பெங்களூரு (07 ஏப் 2020): “தப்லீக் ஜமாஅத்தினர் குறித்து பாஜக எம்பி வெளியிட்ட தகவல் பொய்யானது.” என்று துணை ஆணையர் தெரிவித்துள்ளார். டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸ் தப்லீக் ஜமாஅத்தில் கலந்து கொண்டவர்கள் தனிமைப் படுத்தப் பட்டு நாடெங்கும் அரசின் கண்காணிப்பில் உள்ளனர். அதில் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சார்பில் தகவல் அளிக்கப் பட்டு வருகின்றன. இதற்கிடையே தப்லீக் ஜமாஅத்தினர் குறித்தும் சமூக வலைதளங்களில் சிலர் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். நேற்று…

மேலும்...

இந்தியாவின் முடிவில் திடீர் மாற்றம்!

புதுடெல்லி (07 ஏப் 2020): அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்ற மோடி அரசு உலக நாடுகளுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய விதித்திருந்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்று நோயாளிகளின் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி, அந்த மருந்தை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடியிடம் அமெரிக்க அதிபா் டிரம்ப் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கையைத் தொடர்ந்து, அவ்வாறு இந்தியா மருந்தை அனுப்பாவிட்டால் பின் விளைவுகளை…

மேலும்...

இந்தியாவிற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல்!

வாஷிங்டன் (07 ஏப் 2020): மலேரியாவிற்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யவில்லை என்றால், இந்தியாவுக்கு சர்ப்பரைஸ் காத்திருக்கிறது என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனாவால் அமெரிக்கா பெரும் பாதிப்பை கண்டுள்ளது. உலக வல்லரசான அமெரிக்கா இந்த நோயை கட்டுப்படுத்துவதில் திணறி வருகிறது. இந்நிலையில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் இந்தியாவை மிரட்டும் தொணியில் பேசியுள்ளார். “எங்களுக்கான மருந்தை அனுமதித்தால் நன்றாக இருக்கும் என மோடியிடம் கூறியிருந்தேன். அவர்…

மேலும்...

டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு யார் அனுமதி அளித்தது? சரத்பவார் கேள்வி!

மும்பை (07 ஏப் 2020): டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு அனுமதி அளித்தது யார்? என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து முகநூல் பதிவில் மகாராஷ்டிர மக்களிடம் பேசிய அவர், கொரோனா வைரஸ் பரவலின் தீவிரத்தை உணராமல் டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு அனுமதி அளித்தது யார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பிரச்னையை வைத்து குறிப்பிட்ட மதத்தை வேண்டுமென்றே குறை கூற கூடாது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் கடந்த…

மேலும்...

மும்பையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு!

மும்பை (06 ஏப் 2020): மும்பையில் தனியார் மருத்துவமனை ஒன்றின் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் 40 பேருக்கு கொரோனா பாதித்ததால் அப்பகுதி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிக கொரோனா பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அங்கு நேற்று வரை 748 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று 33 பேருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில் எண்ணிக்கை 781-ஆக அதிகரித்துள்ளது. புனேவில் 19 பேர், மும்பையில் 11 பேர், சதரா, அகமெத்நகர் மற்றும் பல்கர் மாவட்டத்தில் தலா ஒருவர் என…

மேலும்...

பிரதமர் மோடியின் கோரிக்கையை மீறிய பாஜக எம்.எல்.ஏ!

ஐதராபாத் (06 ஏப் 2020): விதிகளை மீறி கூட்டமாக நின்று பாஜக எம்.எல்.ஏ கொரோனாவுக்கு எதிராக நடத்திய தீப்பந்த போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. பல நாடுகள் இதனை எதிர் கொள்ள முடியாமல் திணறி வருகின்றன. இந்தியாவிலும் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளன. இந்நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு பொதுமக்கள் மின்விளக்குகளை அணைத்து 9 நிமிட நேரம் அகல் விளக்குகளை ஏற்ற பிரதமர் மோடி…

மேலும்...

அரசு இன்றே நடவடிக்கையில் இறங்க வேண்டும் – ப.சிதம்பரம் கோரிக்கை!

சென்னை (06 ஏப் 2020): பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கோரிக்கை வைத்துள்ளார். கொரோனா உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. பல நாடுகள் இதனை எதிர் கொள்ள முடியாமல் திணறி வருகின்றன. இந்தியாவிலும் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. பிரதமர் மோடியும் எதிர் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், அறிஞர்களுடன் இது குறித்து ஆலோசித்து வருகிறார். இந்நிலையில் இது குறித்து தனது…

மேலும்...