குஜராத் நிறுவனம், யெஸ் வங்கியில் ரூ.265 கோடி எடுத்தது அம்பலம்!

மும்பை (07 மார்ச் 2020): ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்கு முந்தைய நாள் குஜராத்தில் இயங்கும் ஒரு நிறுவனம், யெஸ் வங்கியிலிருந்து ரூ.265 கோடியை வங்கியில் இருந்து எடுத்துள்ள திடுக்கிடும் தகவல் வெளியே வந்துள்ளது. யெஸ் வங்கி நிா்வாகத்தையும் தன்வசம் எடுத்துக் கொண்டுள்ள ஆா்பிஐ, பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி பிரசாந்த் குமாரை யெஸ் வங்கி நிா்வாகியாக அறிவித்துள்ளது. யெஸ் வங்கி வாராக்கடன் சுமையால் பெரிய அளவிலான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்நிலையில்…

மேலும்...

கடும் எதிர்ப்பை அடுத்து ஏசியாநெட் நியூஸ், மீடியா ஒன் சேனல்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

புதுடெல்லி (07 மார்ச் 2020): மீடியா ஒன் மற்றும் ஆசியா நெட் நியூஸ் சேனல்களுக்கு விதிக்கப்பட்டத் தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. டெல்லி கலவரத்தை தவறாக சித்தரித்ததாக தகவல் ஒளிபரப்புத்துறை இரண்டு சேனல்களுக்கும் 48 மணி நேர தடை விதித்திருந்தது. இந்நிலையில் இரு சேனல்களுக்கும் விதிக்கப்பட்டிருந்த தடைக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். சென்னை பத்திரிகையாளர்கள் மன்றமும், ‘கருத்துச் சுதந்திரத்தின் மீது நடத்தப்படும் நேரடித் தாக்குதல்’ என்று கண்டனம் தெரிவித்திருந்தது. இதனை அடுத்து இரு சேனல்களுக்கும் விதிக்கப்பட்டிருந்தத்…

மேலும்...

யாரும் நம்பாதீங்க – பிரதமர் மோடி அறிவிப்பு!

புதுடெல்லி (07 மார்ச் 2020): கொரோனா வைரஸ் குறித்த வதந்திகள் எதனையும் நம்ப வேண்டாம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி ‘ஜன் ஆஷாதி யோஜனா’ பயனாளிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் சனிக்கிழமை பேசினார். அப்போது அவர், ‘கொரோனா வைரஸ் குறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயவுசெய்து உங்கள் மருத்துவரை அணுகவும். கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்படாமல்…

மேலும்...

மத்திய அரசின் திறமையின்மையால் மக்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி – ப.சிதம்பரம் பாய்ச்சல்!

சென்னை (07 மார்ச் 2020): நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள யெஸ் வங்கியில் இருந்து வாடிக்கையாளா்கள் பணம் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசின் நிா்வாகத் திறமையின்மையை இந்தப் பிரச்னை வெளிக்காட்டுவதாக காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். வாராக் கடன் பிரச்னையால் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தனியாா் வங்கியான யெஸ் வங்கியை இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது. வங்கியில் இருந்து ரூ.50,000 வரை மட்டுமே பணம் எடுக்க முடியும் என்று கட்டுப்பாடு…

மேலும்...

இந்தியாவில் இரண்டு செய்தி சேனல்களுக்குத் தடை!

புதுடெல்லி (06 மார்ச் 2020): டெல்லி கலவர செய்தியை தவறாக ஒளிபரப்பியதாக மலையாள மொழியின் இரண்டு சேனல்களுக்கு மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மலையாளத்தில் பிரபலமான செய்தி சேனல்கள் ஆசியாநெட் மற்றும் மீடியா ஒன். இவை இரண்டு சேனல்களிலும், ஒளிபரப்பான செய்தி அறிக்கைகளில் இடம்பெற்றுள்ள தவறான செய்திகள் எனப் பட்டியலிட்டுள்ள அமைச்சகம், இதுபற்றிய விளக்கங்களுடன், ஒளிபரப்புக்கு இரு நாள்கள் – வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணி…

மேலும்...

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை!

புதுடெல்லி (06 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 30 என்ற கணக்கில் இருந்த நிலையில் டெல்லியில் மேலும் ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் நோய்த் தொற்று, தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனாவைத் தவிர்த்து தென் கொரியா, இத்தாலி மற்றும்…

மேலும்...

இந்தியா பேராபத்தில் உள்ளது – மன்மோகன் சிங் பரபரப்பு கட்டுரை!

புதுடெல்லி (06 மார்ச் 2020): இந்தியாவில் நடக்கும் இனப்படுகொலைகள், பொருளாதார மந்தநிலை, மற்றும் உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் உள்ளிட்டவைகளால் இந்தியா பேராபத்தில் உள்ளதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இந்து பத்திரிகையில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதாவது: “சமூக ஒற்றுமையின்மை, பொருளாதார மந்தநிலை மற்றும் உலக அளவில் வேகமாக பரவி வரும் தொற்றுநோய் (கொரோனா வைரஸ்) ஆகிய மூன்று பிரச்சனைகளால் இந்தியா உடனடியாக மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொண்டுள்ளது என்று மன்மோகன் சிங் தி…

மேலும்...

டெல்லி இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வு!

புதுடெல்லி (05 மார்ச் 2020): டெல்லி இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு அமைதி வழி போராட்டத்தில் இனப்படுகொலையாளர்கள் புகுந்து போராட்டத்தை வன்முறையாக மாற்றினர். இதனால் டெல்லி போர்க்களமானது. பலரது வீடுகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. இந்நிலையில் இந்த வன்முறையில் 53 பேர் உயிரிழந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 44 பேர் இறந்ததாக தகவல் வெளியானது. எனினும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 9 பேர்…

மேலும்...

டெல்லி வன்முறை – கவிஞர் ஜாவித் அக்தார் மீது வழக்கு பதிவு!

புதுடெல்லி (05 மார்ச் 2020): டெல்லி கலவரம் தொடர்பாகவும், ஏன் கலவரத்தை தூண்டிய பெரிய மனிதர்களைக் கைது செய்யவில்லை என்றும் கேள்விகள் கேட்ட கவிஞர் ஜாவித் அக்தார் மீது பிஹாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி இனப்படுகொலையில் 46 பேர் கொல்லப்பட்டனர். பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள். இந்த வன்முறை தொடர்பாக டெல்லி ஆம் ஆத்மி பிரமுகர் தாஹிர் உசேன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரது வீட்டிற்கும் சீல் வைத்தனர். இவற்றை கவிஞர் ஜாவித் அக்தார்…

மேலும்...

டெல்லி இனப்படுகொலையில் கொல்லப்பட்ட 18 நாள் குழந்தையின் தந்தை முதஸ்ஸர் கான்!

புதுடெல்லி (05 மார்ச் 2020): டெல்லி இனப்படுகொலையில் கொல்லப்பட்டவர்களில் 18 நாள் குழந்தையின் தந்தை முதஸ்ஸர்கானும் ஒருவர். தலைநகர் டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு அமைதி வழி போராட்டத்தில் இனப்படுகொலையாளர்கள் புகுந்து போராட்டத்தை வன்முறையாக மாற்றி 46 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். 200 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் படுகொலை செய்யப்பட்டவர்கள் குறித்த பல்வேறு சோக பின்னணிகளும் வெளிவரவத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் டெல்லி ஷிவ் விஹார் பகுதியில் கொலை வெறி பிடித்தவர்களின் இரத்தப் பசிக்கு,…

மேலும்...